Sunday, April 12, 2009

எங்கள் தேசம்..!!!

கொட்டிடும் மழைத்துளி குரிதியைச் சிந்திடும்.!
செத்திடும் தமிழ் மக்கள் செய்த கோடி பாவமோ.!
மண்ணோடு மண்ணாகி மடிகிறார் எம் மக்கள்.!
அவர்களுக்காக கண்ணீர்த்துளியை தானமாக்கி விடாதீர்கள்,
அது கடமையாகிவிடும்..?
அவர்களுக்காக உயிர்த்தியாகம் செய்து விடாதீர்கள்,
அங்கு செத்தவர்களே போதும்.!
மனிதாபிமானம் மட்டும் இருந்தால் போரை நிறுத்துங்கள்..!
இல்லையேல் மடியட்டும் எங்கள் மக்கள்.!
வடு இல்லாமல் அழிந்து போகட்டும் எங்கள் இனம்.!
மகிழ்ச்சியான நாளென்று அறிவியுங்கள் அந்நாளை..!!

2 comments: