மின்மினிப் பூச்சிகளின் கண்சிமிட்டும் மாலை நேரம்...!
சத்தமில்லாமல் தூங்கிக்கொண்டிருக்கும் அன்று பிறந்த பூனைக்குட்டிகள்..!
பிரிய மனமில்லாமல் பிரிந்து செல்லும் அந்தி சூரியன்..!
அறிந்தும் அறியாமலும் செய்த தவறுக்காக வருந்திக் கொண்டிருக்கும் ஆலய பக்கதர்கள்..!
நாளை விடியலுக்காக காத்திருக்கும் நாட்டு ரோஜா மொட்டுக்கள்..!
இத்தனைக்கும் இடையில்" படிக்கவில்லை " என்று
அம்மா அடித்ததில் அழுதுகொண்டிருக்கும்
எனது சத்தம் மட்டும் உரக்க ஒலிக்கிறது...!
"எனது உலகத்தில்..!"

No comments:
Post a Comment