என் அப்பாவுக்காக நான் வார்த்தது..!!
அம்மாவின் அழுகை உரக்க ஒலித்து கொண்டிருந்தது.! அண்ணன்மார் வருகையால் எழுந்த சத்தம் வானத்தை கிழித்தது.!மரணவலி அறிந்திராத எங்கள் வீட்டு மழலைகள் திக்குமுக்காடினர்.!சந்தோஷத்தை மட்டுமே பார்த்திருந்த எனது விழிகள் நீரோடையாய் பாய்ந்தது.! சத்தம் போட்டு சிரிப்பலைகள் கேட்ட வீடு சாவு மேளங்களின் சத்தங்களால் முழங்கின.! சொந்தங்களால் வீட்டு வாசல் வரை நிரம்பி வழிந்தன.!சாவு செய்தி கேட்டு வந்தார்களாம்..? அட கடவுளே..!
எங்கள் வீட்டு முற்றத்தில் எனது அப்பாவின் சடலம்..!நெஞ்சில் நெருப்புடனும்..!கண்களில் நீருடனும்..!உதடுகளில் விம்பல்களுடனும்..!அனுப்பிவைத்தோம் அப்பாவை..!எங்கள் வீட்டு தெய்வத்தை...!!
No comments:
Post a Comment