Saturday, February 14, 2009

என் உலகம்

கடும் மழை பெய்து கலைத்திட்ட மேகம்
மெதுவாய் மழை தூறல் தூவ
வாசல் கதவுவரை வந்த நீரை வாரி இறைத்துக்கொண்டிருந்தார்
அம்மம்மா..!
நேரம் ஆயிற்று எழுந்திரு பள்ளி செல்ல என்றார் அம்மா..!
கைபேசியை காலையிலே நோண்டாதே என்று கத்தித்தீர்த்தாள்
அத்தை..!
புத்தகசுமையை சுமந்துகொண்டு வெளியே வந்தபோது அடக்கிவைத்த கோபத்தை அடிச்சுத் தீர்த்தது மழை..!
அப்பாடா..!
இன்று பள்ளி விடுமுறை என்று பரவசப்பட்டது என் மனம்...
தொடங்கிற்று எங்கள் வீட்டு தொலைக்காட்சி பெட்டியில்
" டோராவின் பயணங்கள்..."

No comments:

Post a Comment